தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 9 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை - பொதுமக்கள் அவதி!
Apr 29, 2026, 04:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 9 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை – பொதுமக்கள் அவதி!

Murugesan M by Murugesan M
Nov 20, 2024, 03:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து 9 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருவதால் சாலையில் குளம்போல் மழை நீர் தேங்கியுள்ளதால் பொது மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்டத்தில், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், காயல்பட்டினம், சாத்தான்குளம், கோவில்பட்டி மற்றும் ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 9 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது.

இதனால், இன்று இரண்டாவது நாளாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளான தூத்துக்குடி பழைய மாநகராட்சி சாலை, கடற்கரை சாலை மற்றும் ரயில்வே ஸ்டேஷன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

மேலும், அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவு மற்றும் இரத்த வங்கி உள்ளிட்ட பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதால் நோயாளிகள் சிரமம் அடைந்தனர். இதனால், மழை நீரை உடனே வெளியேற்ற வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு காேரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் கனமழை காரணமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தை மழைநீர் சூழ்ந்ததால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டதால், சிகிச்சைக்கு வந்தவர்கள் அவதிக்கு உள்ளாகினர்.

அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு ஆகிய இடங்களுக்கு செல்லும் வழி முழுவதும் வெள்ளக்காடாக காணப்பட்டதால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர். மருத்துவமனை நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: rain alerttuticorin rainweather updatelow pressurerain warningmetrological centertamilnadu rainheavy rain
ShareTweetSendShare
Previous Post

நெல்லை மாவட்டத்தில் தொடரும் மழை – மணிமுத்தாறு அருவியில் 7-வது நாளாக குளிக்க தடை!

Next Post

நாகை அருகே விளை நிலங்களுக்குள் புகுந்த கடல் நீர் – சுமார் 100 ஏக்கர் சம்பா பயிர் பாதிப்பு!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies