ஜல்லிகட்டில் ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வேண்டும் : காளை வளர்ப்போர் கோரிக்கை - சிறப்பு தொகுப்பு!
Sep 2, 2026, 06:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜல்லிகட்டில் ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வேண்டும் : காளை வளர்ப்போர் கோரிக்கை – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Jan 2, 2025, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு  சில தினங்களே உள்ள நிலையில், அரசு ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வேண்டுமென காளை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

தை திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தென் தமிழகத்தில் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. மதுரை, திருச்சி, திண்டுக்கல், கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் களம் காண்கின்றன.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக காளைகளை வளர்ப்போர் காளைகளுக்கு நடைபயிற்சி, மண் முட்டுதல், நீச்சல், மாடுபிடி வீரர்களிடம் காளைகள் சிக்காத அளவிற்கு மாடு பிடி உள்ளிட்ட சிறப்பு பயிற்சி அளிக்கின்றனர்

இந்தப் பயிற்சிகளை சிறப்பாக மேற்கொள்ள காளைகளுக்கு வாழைப்பழம், பருத்தி விதை, கடலை புண்ணாக்கு, எள்ளு புண்ணாக்கு என உணவுகளை உரிமையாளர்கள் தங்களின் காளைகளுக்கு வழங்குகின்றனர்.

இப்படி சிறப்பு பயிற்சிகள் கொடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு களம் காணும் காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் சிறந்த காளை என்றும், தங்கம், வெள்ளி, பீரோ, கட்டில் முதல் கார் வரை விலை உயர்ந்த பரிசுகளை தட்டிசெல்கின்றன.

இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் போட்டியில் பங்கேற்பதற்கு உரிமையாளர்கள் காளைகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.

ஆண்களுக்கு நிகராக திண்டுக்கல் மாவட்டம் புகையிலைபட்டியை சேர்ந்த ஜெயமணி என்ற பெண் கடந்த 8 ஆண்டு காலமாக காளையை வளர்த்து தீவிர பயிற்சி அளித்து வருகிறார்.

இவர் வளர்க்கும் காளை மதுரை, திருச்சி, தேனி, சிவகங்கை என பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் பரிசுகளை வென்று வெற்றி வாகை சூடியுள்ளது. இவ்வாறு பல போட்டிகளில் காளையை வெற்றி பெற செய்து ஊருக்கு பெருமை சேர்த்த ஜெயமணி, கடந்த 2 ஆண்டுகளாக காளைகளை போட்டியில் பங்கேற்க வைப்பதில் பல சிக்கல்கள் எழுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

இதற்கு காரணம் தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகளில் கடை பிடிக்கப்படும் டோக்கன் முறையே என்கிறார் ஜெயமணி. டோக்கன் முறையால் பல சிக்கல்கள் எழுவதாக கூறும் ஜெயமணி, அந்த முறையை ரத்து செய்து பாரம்பரிய முறையை கடைப்பிடிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கிறார்.

பல ஆண்டுகளாக எந்த சிக்கலும் இல்லாமல் வாடிவாசலில் காளைகளை களமிறக்கிய நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் டோக்கன் முறையால் உரிமையாளர்கள் கடும் இன்னுலுக்கு ஆளாவதாக கூறுகிறார் ஜல்லிக்கட்டு ஆர்வலர் ஜான் பீட்டர்.

டோக்கன் முறையால் தங்களுக்கு சரியான மரியாதை கிடைப்பதில்லை என தெரிவிக்கும் அவர், டோக்கன் வாங்க ஆயிரக்கணக்கில் பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்படுவதாக வேதனை தெரிவித்தார்.

Tags: thain pongalbull breedersonline registration issueavaniiyapuramMaduraiTamil Nadujallikattu
Share
Tweet
SendShare
Previous Post

குடியரசு தின விழா – டெல்லியில் அணி வகுப்பு ஒத்திகை!

Next Post

ரூ.400 கோடிக்கு காலண்டர் வர்த்தகம் – சிவகாசி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

Related News

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies