விஞ்ஞானிகள் குழப்பம் : ஆச்சரியங்கள் நிறைந்த கேதார்நாத் கோயில்!
Sep 13, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

விஞ்ஞானிகள் குழப்பம் : ஆச்சரியங்கள் நிறைந்த கேதார்நாத் கோயில்!

Murugesan M by Murugesan M
Feb 14, 2025, 07:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விஞ்ஞானிகளை இன்னும் குழப்பும் 1,200 ஆண்டுகள் பழமையான திருக்கோயில் கேதார்நாத் ஆகும். கடுமையான பூகம்பங்கள், அதிகமான பனிப்பொழிவு மற்றும் பல்வேறு இயற்கை பேரழிவுகளைத் தாண்டி இன்றைக்கும், பிரமாண்டமாக திகழ்திறது கேதார்நாத் திருக்கோயில். அந்த அற்புதத் திருத்தலத்தைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவின் புகழ் பெற்ற சிவஸ்தலங்களுள் ஒன்று கேதார்தாத். இது இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம், மந்தாகினி ஆற்றின் ஓரமாக கார்வால் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க தலங்களுள் கேதார் நாத் ஒன்றாகும். கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது.

அற்புதமான இந்த திருத்தலம் , எப்போது யாரால் எப்படி கட்டப்பட்டது என்பது இன்றுவரை தெரியவில்லை. விஞ்ஞானிகளால் கூட கண்டு பிடிக்க முடியாத ஆச்சரியமாகவே கேதார் நாத் திருக்கோயில் அமைத்துள்ளது.

2013ஆம் ஆண்டு, பெரும் வெள்ளத்தில், கேதார்நாத் பகுதி முழுவதும் சேதமடைந்தது.ஆனாலும் இந்த ஆலயத்துக்கு ஒரு சிறிய பாதிப்பும் கூட ஏற்படவில்லை. கோயிலுக்கு முன் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஒரு பெரிய பாறையினால் கோயில் சேதம் இல்லாமல் தானாகவே தடுக்கப் பட்டது.

‘பீம் ஷீலா’ என்னும் அந்தப் பெரிய பாறை, கோயிலுக்குப் பின்னால் அதிசயமாக நிலைநிறுத்தப்பட்டு, வெள்ள நீரைத் திசை திருப்பி, சுவாமி சன்னதியைப் பாதுகாத்ததாக நம்பப்படுகிறது.

கேதார்நாத் என்றால், ‘வயல்கள் நிறைந்த நிலங்களின் கடவுள்’ என்று பொருள். வானிலை காரணமாக ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் மட்டுமே கேதார் நாத்தில் ஈசனை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

குளிர்காலங்களில் இக்கோயிலில் உள்ள விக்கிரகம், ‘உக்கிமாத்’ தில் உள்ள ஓம்காரேஸ்வரர் கோயிலுக்கு மாற்றப்பட்டு, அங்கு நாள்தோறும் வழிபாடு நடத்தப் படுகிறது. புராணப் படி, ஆறு மாதங்கள் தேவர்களாலும், ஆறு மாதங்கள் மனிதர்களாலும் கேதார் நாத் இறைவனுக்கு வழிபாடு நடப்பதாக சொல்லப் படுகிறது.

மேலும், 275 தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்களுள் கேதார நாத்தும் ஒரு தலமாகும். இத்தலத்து இறைவனைப் போற்றி, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி சுவாமிகள், சேக்கிழார், உள்ளிட்ட அருளாளர்கள் திருப்பதிகம் பாடியுள்ளனர்.

இங்குள்ள 12 அடி உயர சிவலிங்கமானது முக்கோண வடிவில் உள்ளது. இந்த லிங்கம் இயற்கையாகவே உருவானதாகும். இத்தல ஈசனை வழிபட்டால் பாவங்கள் நீங்கி, மோட்சம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இக்கோயிலில் சிவலிங்கத்தை பக்தர்கள், தங்கள் கைகளால் தொட்டு பூஜை செய்யலாம். மேலும் தாங்களே சுவாமிக்கு நெய்யால் அபிஷேகம் செய்யலாம்.

மகா பாரத காலத்தில், பஞ்ச பாண்டவர்கள் குருக்ஷேத்ர போரில் தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குவதற்காக சிவபெருமானை வழிபட எண்ணினார்கள். சிவபெருமானோ எருது வடிவம் எடுத்து மறைகிறார்.

எருது வடிவில் இருப்பது சிவபெருமான்தான் என்பதை உணர்ந்த பீமன் அந்த எருதின் கால்களைப் பிடிக்கிறான். அதனையடுத்து, சிவபெருமான் எருதின் ரூபத்தில் ஐந்து புண்ணிய இடங்களில் பாண்டவர்களுக்குக் காட்சி கொடுக்கிறார்.

எருதின் திருமுடி கல்பேஸ்வரில் காட்சியளித்தது. எருதின் முகம் ருத்ரநாத்தில் தோன்றியது எருதின் திமில் கேதர்நாத்தில் தோன்றியது, எருதின் முன்னங்கால்கள் துங்கநாத்தில் தெரிந்தது. எருதின் வயிறுப் பகுதி மத்தியமகேஸ்வரில் காட்சியளித்தது.

அதனையடுத்து பஞ்சப் பாண்டவர்கள் இந்த ஐந்து புண்ணிய தலங்களிலும் சிவபெருமானுக்குத் திருக்கோயில் கட்டினார்கள். இந்த ஐந்து திருக்கோயில்களும் , பஞ்ச கேதார தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

பஞ்ச கேதார கோயில்களைக் கட்டிய பிறகு பாண்டவர்கள் சிவனை வழிபட்டு முக்தி பெற்றனர் என்பது புராண வரலாறு.

இந்த ஐந்து திருக்கோயில்களும், வட இந்தியக் கட்டடக்கலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளன. பஞ்ச கேதார் கோயில்களில் சிவ தரிசனம் முடித்த பிறகு பத்ரிநாத்தில் விஷ்ணு தரிசனம் செய்ய வேண்டும் என்பது மரபாக உள்ளது. பஞ்ச கேதார தலயாத்திரை என்பது, இந்துக்களின் மிக முக்கியமான சிவ யாத்திரையாகும்.

குறிப்பாக, கேதார கௌரி விரதம் இருந்து ஐப்பசி மாத அமாவாசை நாளில் கேதார்நாத் ஈசனை வழிபடுவது சிறப்பாகும். தற்போதுள்ள கேதார்நாத் கோயிலை, 8ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் புனரமைத்ததாக கூறப்படுகிறது.

Tags: IndiatempleGod SivaScientists Confused: Kedar Nath Temple full of surprises!கேதார்நாத் கோயில்
Share
Tweet
SendShare
Previous Post

திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

இந்திய சாலைகள் அமெரிக்காவையே விஞ்சிவிட்டன : நிதின் கட்கரி

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies