பிரமித்த உலக நாடுகள் : இந்திய வானத்தின் கவசம் ஆகாஷ்தீர் - சிறப்பு கட்டுரை!
Sep 21, 2026, 12:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரமித்த உலக நாடுகள் : இந்திய வானத்தின் கவசம் ஆகாஷ்தீர் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
May 17, 2025, 09:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி வெறும் இராணுவ வெற்றி மட்டுமல்ல. இந்திய பாதுகாப்புத் துறையின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் வெற்றியாகும். ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் DRDO, இஸ்ரோ, மற்றும் அரசின் பிற தொழில்நுட்ப நிறுவனத்தின் அயராத உழைப்பும் ஆராய்ச்சியும் உலகையே பிரமிக்க வைத்துள்ளது.  அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஆப்ரேஷன் சிந்தூர் இராணுவ  நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் மேற்கு எல்லையில் உள்ள மாநிலங்களில் 26 இடங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான தாக்குதல்களைப் பாகிஸ்தான் நடத்தியது.  இந்திய வான்வெளியில் அத்துமீறி பாகிஸ்தான் நடத்திய ஒருங்கிணைந்த ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடுவானிலேயே இந்தியா இடைமறித்து அழித்தது.

இந்தியாவில் எந்த ஒரு பகுதியிலும் எந்த ஒரு சிறு சேதத்தையும் ஏற்படுத்த முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் தோல்வியுற்றது. இந்த வெற்றிக்குக் காரணமாக  Akashteer வான் பாதுகாப்பு அமைப்பு அமைந்துள்ளது.   பாகிஸ்தானில் இருந்து வந்த வான்வழி ட்ரோன்கள், ஏவுகணைகள், பிற மைக்ரோ ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVகள்) மற்றும் ஏவுகணைகளை இந்திய வான் எல்லைக்குள் நுழைவதைத் தடுத்து அழித்துள்ளது Akashteer.

மேம்பட்ட வான் பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு பொறிமுறையான அமைப்பு  Akashteer முழுவதும்  உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட  இந்தியாவின் சொந்த வான் பாதுகாப்பு அமைப்பு ஆகும். Akashteer என்பது உள்நாட்டு AI-யால்  இயங்கும் வான் பாதுகாப்பு அமைப்பாகும். Akashteerயை இந்தியாவின் DRDO, இஸ்ரோ மற்றும் பெல்  ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து உருவாகியுள்ளன.

எந்தவொரு வெளிநாட்டுக் கூறுகள் அல்லது செயற்கைக்கோள் சார்புகளும் இல்லாமல் கட்டப்பட்ட முதல் செயல்பாட்டு AI போர்-மேகம் என்று Akashteer பாராட்டப்படுகிறது. எதிரி விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கண்டறிந்து, கண்காணித்து அழிக்கும்  தொழில்நுட்பம் கொண்ட வான் பாதுகாப்பு அமைப்புதான் Akashteer .

இது அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு கட்டுப்பாடு அமைப்பாகும். இது பல்வேறு ரேடார் அமைப்புகள், சென்சார்கள் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை ஒரே செயல்பாட்டுக் கட்டமைப்பில் ஒருங்கிணைக்கிறது. அதாவது, கட்டுப்பாட்டு அறை, ரேடார்கள் மற்றும் வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் என வான் பாதுகாப்பு அமைப்பு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பொதுவான, நிகழ்நேர வான் படத்தை வழங்குகிறது. இதற்கு இஸ்ரோவின் NAVIC போன்ற செயற்கைக்கோள்கள் பயன்படுகின்றன.

இது ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த உதவுகிறது.  வான்வழி அச்சுறுத்தல்களுக்கு விரைவான பதிலடியைச் செயல்படுத்துகிறது. AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த Akashteer, வெவ்வேறு இலக்குகளைக் குறிவைத்து, ஒரே நேரத்தில்  நூற்றுக்கணக்கான ஏவுகணைகள்,ட்ரோன்கள் வந்தாலும் கூட, அவற்றைத் துல்லியமாக வானிலே இடைமறித்து அழிக்கிறது.

பொதுவாக வான் பாதுகாப்பு பூமியில் உள்ள ரேடார்கள், மனிதனால் கண்காணிக்கப்படும் அமைப்புகள் மற்றும் கட்டளைச் சங்கிலிகளால் தூண்டப்படும் தரையிலிருந்து வான் ஏவுகணை பேட்டரிகளை பெரிதும் நம்பியிருக்கின்றன.

இந்நிலையில்,Akashteer தொழில்நுட்பம் போர்ப் பகுதிகளில் குறைந்த அளவிலான வான்வெளியைக் கண்காணிக்கவும், தரை அடிப்படையிலான வான் பாதுகாப்பு ஆயுத அமைப்புகளைத் திறம்படக் கட்டுப்படுத்தவும் அனுமதிக்கிறது. மேலும்,Akashteer தாக்கவரும் UAV களின் கண்களுக்குத் தெரியாமலேயே அவற்றை  இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டதாகும். மேலும், ஆபரேட்டர் உள்ளீடு இல்லாமல் தாக்குதல்களை ஒருங்கிணைக்கும் திறன் கொண்ட ட்ரோன்களுடன் விமானப் பாதைகளை மாற்றும் திறன் கொண்டதாகவும் Akashteer விளங்குகிறது.

இதன் மூலம், உள்நாட்டுச் செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் AI போர் ஒருங்கிணைப்பைப் போர் தளத்தில் வெற்றிகரமாக ஒருங்கிணைத்த முதல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா அல்லாத நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. ஒரு வரியில் சொல்வதானால், இந்திய வான் எல்லைக்குள் எந்த நேரத்திலும், எத்தனை வேகத்தில், எத்தனை  வந்தாலும், Akashteer வேகமாகப் பார்க்கிறது, வேகமாகத் தீர்மானிக்கிறது மற்றும் வேகமாகத் தாக்குகிறது.

மொத்தத்தில்,இந்திய பாதுகாப்புப் படைகளின்  குறிப்பிடத்தக்கச் செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப மேன்மையை Akashteer வெளிப்படுத்துகிறது.

Tags: Amazed countries of the world: Akashthirthe shield of the Indian sky - Special articleஆகாஷ்தீர்இராணுவ வெற்றிIndiapakistandrdoஆபரேஷன் சிந்தூர்
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

டாஸ்மாக் மேலாண் இயக்குநரிடம் அமலாக்கத்துறை விசாரணை நிறைவு!

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies