கோடி கோடியாய் அள்ளிய பிசிசிஐ : ஒரே ஆண்டில் இவ்வளவு வருமானமா?
Aug 5, 2026, 02:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

கோடி கோடியாய் அள்ளிய பிசிசிஐ : ஒரே ஆண்டில் இவ்வளவு வருமானமா?

Murugesan M by Murugesan M
Jul 18, 2025, 08:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரே ஆண்டில் பிசிசிஐ கோடி கோடியாய் குவித்த வருமானம் பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. பொன் முட்டையிடும் வாத்தாக பார்க்கப்படும் ஐபிஎல் போட்டிகள் அசுர வளர்ச்சி பெற்றதன் விளைவாக பிசிசிஐ-யின் வருமானம் வற்றாத ஜீவநதியாக உருவெடுத்துவிட்டது.

டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டிகளை கண்டு ரசித்த கிரிக்கெட் ரசிகர்களை, 2007ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடர் குதூகலத்தில் திக்குமுக்காட வைத்தது. 20 + 20 ஓவர்கள், பறக்கும் சிக்ஸர்கள், த்ரில் முடிவு, சில மணி நேரத்தில் ரிசல்ட் என கிரிக்கெட்டில் ஒரு புரட்சியை உருவாக்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி.

உலகளவிலும், பட்டிதொட்டியெங்கும் கிரிக்கெட் ரசிகர்களை ஒரே குடையின் கீழ் கட்டிப்போட்ட ஐபிஎல் தொடர்தான், தற்போது பிசிசிஐ-யின் கஜானாவை நிரப்பியுள்ளது.

ஐபிஎல் ஜாக்பாட்டால், பிசிசிஐ ஒரே ஆண்டில் பல கோடிகளை அள்ளியுள்ளது. 2023-24ஆம்  நிதியாண்டில் மட்டும் பிசிசிஐ-யின் ஆண்டு வருமானம்  9 ஆயிரத்து 741 கோடியே 70 லட்சம் ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. குறிப்பாக ஐபிஎல் தொடரில் மட்டும் 5 ஆயிரத்து 761 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

பிசிசிஐயின் மொத்த வருமானத்தில் பாதிக்கும் மேல், அதாவது 59 சதவிகிதம், ஐபிஎல் தொடர் மூலம் மட்டுமே கிடைத்துள்ளது. இதனால்தான் ஐபிஎல் தொடரை பிசிசிஐ-யின் தங்க முட்டையிடும் வாத்து என விவரம் அறிந்தவர்கள் வர்ணிக்கின்றனர்.

இது மட்டுமின்றி ஐசிசி-யிடம் இருந்து ஆண்டுக்கு ஆயிரத்து 42 கோடி ரூபாய் பெறும் பிசிசிஐ,  வங்கி டெபாசிட் மூலம் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாயை வட்டியாகவும் பெற்று வருகிறது. மகளிர் ப்ரீமியர் லீக், இந்தியாவில் நடக்கும் சர்வதேச போட்டிகளின் மூலம் கிடைக்கும் டிக்கெட் வருமானம், ஒளிபரப்பு உரிமம் எனப் பல வழிகளிலும் பிசிசிஐ வருமானத்தைப் பெற்று வருகிறது.

இதன் காரணமாக பிசிசிஐ  சர்வதேச அளவில் மற்ற நாடுகளை விட பணக்கார கிரிக்கெட் வாரியாக உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் வரவு,  கிரிக்கெட் மீதான இந்திய ரசிகர்களின் அபரிதமான ஆதரவு போன்றவையுமே, பிசிசிஐ-யின் மாபெரும் வளர்ச்சிக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Tags: CricketBCCIBCCI rakes in crores: Is this how much income it has in a single year?BCCI news today
Share
Tweet
SendShare
Previous Post

‘கிஸ் கேம்’ சர்ச்சையில் ஆஸ்ட்ரோனமர் CEO : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் – கலாய்த்த எலான் மஸ்க்!

Next Post

“Spam content” சர்ச்சையால் அதிரடி : 1 கோடி கணக்குகளுக்கு பூட்டுப்போட்ட மெட்டா!

Related News

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டி நிறைவு – 39 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்தது இந்தியா!

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

காமன்வெல்த் குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளி – இந்தியா அபாராம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies