பாகிஸ்தானை தோலுரிக்கும் பயங்கரவாதிகள் : அம்பலமான பொய் முகம் - மீண்டும் சாம்பல் பட்டியலில் இணையுமா?
Sep 10, 2026, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாகிஸ்தானை தோலுரிக்கும் பயங்கரவாதிகள் : அம்பலமான பொய் முகம் – மீண்டும் சாம்பல் பட்டியலில் இணையுமா?

Murugesan M by Murugesan M
Sep 20, 2025, 03:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கவில்லை எனப் பாகிஸ்தான் தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. ஆனால், அடுத்தடுத்து பயங்கரவாதிகள் வெளியிட்டு வரும் வீடியோக்கள், பாகிஸ்தானின் கூற்றை எல்லாம் பொய்யாக்கி வருகின்றன. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

பாகிஸ்தான் தனது நாட்டு மக்களைக் காட்டிலும் பயங்கரவாதிகளின் நலனுக்காக அனைத்தையும் செய்து வருகிறது. பணம், ஆயுதம், பயிற்சி என அனைத்தையும் பயங்கரவாதிகளுக்குத் தங்குதடையின்றி வழங்கி வருகிறது. இது ஊரறிந்த ரகசியம்.

ஆனால், பயங்கரவாதிகளுக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என ஆண்டாண்டு காலமாகப் பாகிஸ்தான் சத்தியம் செய்து வருகிறது. மேலும், இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைத் தோல்வியில் முடிந்ததாகவும், அந்தத் தாக்குதலால் தங்களுக்குப் பெரியளவில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது.

பாகிஸ்தானின் இத்தகைய வாதங்கள் அனைத்தும் பொய் என்பதை, தக்க ஆதாரங்களுடன் மத்திய அரசு தெளிவுப்படுத்திவிட்டது. இந்நிலையில், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளும், பாகிஸ்தானின் உண்மை முகத்தைத் தற்போது அம்பலப்படுத்த தொடங்கியுள்ளன.

அண்மையில், பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில்,ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் கமாண்டரான மசூத் இலியாஸ் காஷ்மீரி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தானின் எல்லைகளைப் பாதுகாக்கத் தாங்கள் பயங்கரவாதத்தைத் தழுவியதாகவும், டெல்லி, காபூல், கந்தஹார் உள்ளிட்ட பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறினார். ஆனால், மே 7ம் தேதி பஹவல்பூரில் இந்தியா நடத்திய தாக்குதலில் மசூத் அசாரின் குடும்பமே பூண்டோடு அழிக்கப்பட்டதாக வேதனையுடன் அவர்  தெரிவித்தார்.

இதுமட்டுமல்லாமல், கொல்லப்பட்ட மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்களின் இறுதிசடங்கை அரசு மரியாதையுடன் நடத்த பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் உத்தரவிட்டதாகவும், இறுதி சடங்கில் ராணுவத் தளபதிகளைக் கலந்து கொள்ள அறிவுறுத்தியதாகவும் மசூத் இலியாஸ் காஷ்மீரி குறிப்பிட்டார்.

இவரின் இந்தப் பேச்சு 2 விஷயங்களைத் தெளிப்படுத்தியுள்ளது. ஒன்று, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் மசூத் அசாரின் குடும்பம் அழிக்கப்பட்டுள்ளது. மற்றொன்று, பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி மிக நெருங்கிய உறவு வைத்துள்ளார்.

மறுபுறம், லஷ்கர் இ தொய்பா அமைப்பின் மூத்த தலைவரான சைஃபுல்லா கசூரியும் தன்பங்கிற்கு, பாகிஸ்தானின் உண்மை முகத்தை  தோலுரித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானின் முரிட்கே பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டன.

இவற்றைத் தனது சொந்தச் செலவில் மீண்டும் கட்டி தர பாகிஸ்தான் உறுதி அளித்துள்ளதாக, சைஃபுல்லா கசூரி அண்மையில் தெரிவித்தார். இந்த முகாம்களை அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர்க் கூறினார்.

இவரின் இந்தப் பேச்சு, பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தான் நிதியுதவி அளிப்பதை உறுதி செய்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்யும் நாடுகளுக்கான கிரே பட்டியலில் பாகிஸ்தான் ஏற்கனவே இடம்பெற்றிருந்தது. தற்போது மீண்டும் அந்தப் பட்டியலில் பாகிஸ்தான் இணைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

உலக அரங்குகளில் பாகிஸ்தானை அம்பலப்படுத்தும் இந்தியாவின் முயற்சிக்கு, பயங்கரவாதிகளின் இத்தகைய பேச்சுகள் கூடுதல் வலு சேர்த்துள்ளன.

Tags: IndiapakistanWill the exposed false face of the terrorists who are destroying Pakistan be added to the grey list again?பாகிஸ்தானை தோலுரிக்கும் பயங்கரவாதிகள்
Share
Tweet
SendShare
Previous Post

அம்பலப்படுத்திய யாசின் மாலிக் : ஹபீஸ் சயீதை சந்தித்ததற்காக நன்றி கூறிய மன்மோகன்சிங்!

Next Post

பக்ராம் விமான தளத்தை குறிவைக்கும் அமெரிக்கா : விட்டுதர மறுக்கும் ஆப்கான் – நடக்கப்போவது என்ன?

Related News

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies