துரோகம் என்ற வார்த்தையை பயன்படுத்த தகுதியற்றவர் முதல்வர் ஸ்டாலின் - அண்ணாமலை கடும் விமர்சனம்!
Apr 18, 2026, 06:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துரோகம் என்ற வார்த்தையை பயன்படுத்த தகுதியற்றவர் முதல்வர் ஸ்டாலின் – அண்ணாமலை கடும் விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 21, 2025, 10:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாக, விவசாயிகளுக்கு துரோகம் மட்டுமே செய்து கொண்டிருக்கும் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின்  துரோகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவே தகுதியற்றவர் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில்,  நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க, சேமிப்புக் கிடங்குகள் மற்றும் உணவுக் கிடங்குகள் அமைக்க, ₹309 கோடி செலவிட்டதாக திமுக அரசு கணக்கு காட்டியிருக்கிறதே, எந்த மாவட்டத்தில் எத்தனை சேமிப்புக் கிடங்குகள் அமைத்தீர்கள் என்பதற்கு வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விவசாயிகளுக்கு செலவிட வேண்டிய ₹309 கோடி எங்கே சென்றது? குறித்த நேரத்தில் திமுக அரசு நெல் கொள்முதல் செய்யாமல், கொள்முதல் வாகனங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய போக்குவரத்து நிதியில், ₹160 கோடி ஊழல் செய்ததால், நெல் கொள்முதலில் 30 – 40 நாட்கள் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு இன்னும் ஏன் முதலமைச்சரோ, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணியோ பதிலளிக்கவில்லை? கொள்முதல் செய்வதில் திமுக அரசு ஏற்படுத்திய தாமதத்தால், விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, ஈரப்பதம் அதிகமானதற்கு யார் காரணம்? என்றும் அவர் வினவியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் செய்வதில், திமுக அரசு வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனால், பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிட்டு வீணாகின்றன. ஊழலுக்காக, தமிழக விவசாயிகளுக்குத் தொடர்ந்து துரோகம் செய்து கொண்டிருக்கும் திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின்
அவர்களுக்கு, மத்திய அரசின் மீது பழி போடக் கூச்சமாக இல்லையா? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: Annamalai Press MeetDMK governmentFARMERSChief Minister Stalinbjp annamalai latestpaddy bundlesbjp annamalaiannamalaiannamalai bjpannamalai speech
ShareTweetSendShare
Previous Post

செங்கல்பட்டு அருகே மின் விளக்கு எரியாததை கண்டித்து அனைத்துக்கட்சி சார்பில் ஆர்பாட்டம்!

Next Post

பள்ளி குழந்தைகளை கையாள்வது குறித்து ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Related News

தென்னாப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்த சிறுத்தைகள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது – கிரண் ரிஜிஜூ

பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!

உதகையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!

குறிஞ்சிப்பாடி அருகே அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பிரச்சாரம் – இளைஞர்கள் வாக்குவாதம்!

திமுகவுக்கு எதிராக பேச்சு – பிரேமலதா மீது ஸ்டாலின் அதிருப்தி என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் இடஒதுக்கீடூ மசோதா விவகாரம் நாடு தழுவிய போராட்டம் நடத்த என்டிஏ திட்டம்!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டது – இசக்கி சுப்பையா

செங்கோட்டையன் திமுக உளவாளி – இபிஎஸ் குற்றச்சாட்டு!

இன்று கோவை வருகிறார் பிரதமர் மோடி – என்டிஏ வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை!

அவிநாசி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன் தீவிர பரப்புரை – திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கூறி வாக்கு சேகரிப்பு!

நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் நடைபெற்ற மதமாற்ற சம்பவம் திட்டமிட்ட நாடகம் – தேவேந்திர பட்னாவிஸ்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக எம்பிக்கள் வலியுறுத்தல்!

தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் கலந்து பேசி தீர்வு கண்டவர் எடப்பாடி பழனிசாமி; த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு

5 ஆண்டுகால மக்கள்விரோத திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் -நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies