கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் : திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி பாஜக அசத்தல்!
Apr 16, 2026, 04:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் : திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி பாஜக அசத்தல்!

Murugesan M by Murugesan M
Dec 13, 2025, 06:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றி, பாஜக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கேரளாவில் மொத்தமுள்ள ஆயிரத்து 200 உள்ளாட்சி அமைப்புகளில், ஆயிரத்து 199 அமைப்புகளுக்குக் கடந்த 9 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றிப் பாஜக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

மொத்தம் உள்ள 101 வார்டுகளில் 50 வார்டுகளை தேசிய ஜனநாயக கூட்டணி கைபற்றிய நிலையில், ஆளும் இடது சாரிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் LDF 29 வார்டுகளிலும், UDF 19 வார்டுகளிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள சாஸ்தாமங்கலம் கோட்டத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் டிஜிபி ஸ்ரீலேகா வெற்றியைத் தன்வசப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக, கிறிஸ்தவர்கள், வக்பு வாரியம் இடையே பிரச்னைக்குரிய இடமாகப் பார்க்கப்பட்ட முனம்பம் பகுதியில், NDA கூட்டணி வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன்மூலமாக, கேரளாவில் முதன்முறையாக மாநகராட்சியைக் கைப்பற்றி பாஜக வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

திருவனந்தபுரம் உள்ளாட்சி தேர்தல் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, வாக்களித்த மக்களுக்குப் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

UDF, LDF ஆகியவற்றால் கேரள மக்கள் வெறுப்படைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் பாஜக- தேசிய ஜனநாயக கூட்டணிக்குக் கிடைத்துள்ள வெற்றியானது கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர், கேரள மக்களுக்கு நல்லாட்சி வழங்கக்கூடிய ஒரே கட்சி பாஜக தான் எனக் கூறியுள்ளார்.

Tags: KeralabjpKerala local body election results: BJP wins Thiruvananthapuram Corporation in a stunning victory
ShareTweetSendShare
Previous Post

காவல் சார்பு ஆய்வாளர் மனைவி தூக்கிட்டு தற்கொலை : உறவினர்கள் சாலை மறியல்!

Next Post

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்!

Related News

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே

சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மகான்கள் – பிரதமர் மோடி புகழாரம்!

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆதரவு – பிரதமருக்கு பிரதீபா பாட்டில் கடிதம்!

இந்துக்களையும், இந்து தர்மத்தை பற்றியும் கொச்சையாக பேசும் திமுக – ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

மழை, வெள்ளத்தை எதிர்கொள்ள நடவடிக்கை : பேரிடர் மேலாண்மையை மேம்படுத்தும் மகாராஷ்டிரா – சிறப்பு கட்டுரை!

E CABINET-ஆக மாற்றப்பட்ட திரிபுரா அமைச்சரவை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தோல்வி பயம் காரணமாக கலரத்தை தூண்ட திமுக முயற்சி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

திமுக அரசின் மோசமான ஆட்சியை மறைக்க தொகுதி மறுவரையறை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின் – தமிழிசை குற்றச்சாட்டு!

தமிழகம் முழுவதும் ரூ.8000 கூப்பன் விநியோகம் செய்யும் திமுகவினர் – சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் – டிடிவி தினகரன்

மனிதவளத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – நிறைவேற்றப்படவில்லை என தகவல்!

ஊழல் காரணமாக திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள் – ஜி.கே.வாசன் உறுதி!

தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

8000 கொடுத்தாலும், 8 லட்சம் கொடுத்தாலும் திமுக தோல்வி அடைவது உறுதி – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது – சரத்குமார் குற்றச்சாட்டு!

என்டிஏ ஆட்சி அமைந்ததும் திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஒதுக்கப்படும் – அண்ணாமலை உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies