திருப்பூர் அருகே கோவில் இடிப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்!
Jul 19, 2026, 07:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பூர் அருகே கோவில் இடிப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 7, 2026, 01:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் அருகே கோவில் இடிப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்  அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அவர விடுத்துள்ள பதிவில், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள செல்வ முத்துக்குமரன் திருக்கோவில் அப்பகுதி மக்களின் குலதெய்வ வழிபாட்டிற்கான பழமையான கோவில் என தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று,  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பழி வாங்குவதற்காக, இன்று இந்த பழமையான திருக்கோவிலை, காவல்துறையைக் குவித்து திமுக அரசு முற்றிலுமாக இடித்துள்ளதாக சாடினார்.

திமுக அரசின் இந்த ஹிந்து மத விரோத, தரங்கெட்ட நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஹிந்து கோவில்களுக்குச் சொந்தமான இடங்களை மீட்க வக்கற்ற திமுக அரசு, பொதுமக்கள், தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வரும் பழமையான கோவில்களை தொடர்ந்து இடிப்பதாக தெரிவித்துள்ளார்.

யாரை திருப்திப்படுத்த இது போன்ற ஹிந்து மத விரோத செயல்பாடுகளை நடத்துகிறது திமுக? செல்வ முத்துக்குமரன் திருக்கோவிலை இடிப்பதை எதிர்த்துப் போராட்டம் நடத்திய, ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர், காடேஸ்வரா சுப்பிரமணியம்  மீது, காவல்துறை நடத்திய பலப்பிரயோகம் காரணமாகக் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பக்தர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். போலி மதச்சார்பின்மை பேசி, தொடர்ந்து தமிழக மக்களின் வழிபாட்டு உரிமைகளை பறித்துக் கொண்டிருக்கும் திமுக, தனது அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்திக் கொள்வது நல்லது. பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: Annamalai Press MeetTiruppurPerumanallurbjp annamalai latestBJP National General Council member AnnamalaiSelva Muthukumaran Templebjp annamalaiannamalaiannamalai bjpannamalai speech
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் அருகே கோவிலை இடித்த அதிகாரிகள் – எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட காடேஸ்வரா சுப்பிரமணியம் காயம்

Next Post

புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் மீதான பாலியல் குற்றச்சாட்டு – முக்கிய ஆதாரங்கள் சமர்ப்பிப்பு

Related News

நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – அமைச்சர் கிரண் ரிஜிஜூ

மாணவர்கள் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் – அவையை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை!

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு மேல்முறையீட்டுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள இயலாது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

குதிரை பேர விவகாரம் – கரூர் நிதி நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டாலின் வருகையில் மாற்றம் – ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற திமுகவினர்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கன மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் ரஷ்யா : எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் உலகின் 3-வது பெரிய நாடாக உருவெடுத்த பாரதம் – சிறப்பு தொகுப்பு!

குன்றத்தூர் அருகே ரவுடி சுட்டுப் பிடிப்பு – காவலரை தாக்கிவிட்டு தப்பியோடியதால் நடவடிக்கை!

அர்ஜெண்டினா அணியின் பிதாமகன் : யார் இந்த மெஸ்ஸி ? – சிறப்பு கட்டுரை!

தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரம் – மேலும் இருவர் கைது!

யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது – வனத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

விருதுநகர் மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் – நிர்மலா சீதாராமன்

கரூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த இபிஎஸ்; இடைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

2024-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; 3 விருதுகளை வென்ற அமரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies