பகவத் கீதையை மையப்படுத்தி நடனம், நாடகம் - பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவர்கள் அசத்தல்
Sep 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பகவத் கீதையை மையப்படுத்தி நடனம், நாடகம் – பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவர்கள் அசத்தல்

Manikandan by Manikandan
Jan 26, 2026, 06:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை தியாகராய நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் பகவத் கீதையை மையமாக கொண்டு குழந்தைகள் அரங்கேற்றிய நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்து கைத்தட்டல்களை அள்ளியது.

பகவத் கீதை என்பது வாழ்க்கையின் கடமைகள், தர்மம், கர்மா, பக்தி ஆகியவற்றை எளிய முறையில் விளக்கும் ஆன்மிக வழிகாட்டியாக விளங்குகிறது.

இந்த பகவத் கீதையை மையமாக கொண்டு குழந்தைகள் அரங்கேற்றிய நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிதான் பார்வையாளர்களை கவர்ந்தது.

சென்னை தி நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், சென்னையின் அனைத்து கிளைகளிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்குமான திட்டப் பணிகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் பகவத் கீதையை மையமாக கொண்டு Pre KG முதல் LKG வரையிலான குழந்தைகள் பங்கேற்ற நாடகம்தான் ஹைலைட். பகவத் கீதையின் தத்துவத்தை உள்வாங்கி நடித்த மாணவர்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர்.

பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்த கலாசாரத்தை நினைவு கூறும் விதமாக நாடகம் அமைக்கப்பட்டிருந்தது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஸ்கூல் ப்ராஜெக்டுக்காக பகவத் கீதையை கேட்டுத் தெரிந்துக் கொள்வது போல, அதில் உள்ள பக்தி முறைகளை தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டிய விதம் திரையில் காணும் காட்சிகளை மிஞ்சியது.

4 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் சமஸ்கிருத துறை மாணவர்கள், பகவத் கீதையில் உள்ள முக்கிய நிகழ்வுகளையும், பகவத் கீதையின் 18 அத்தியாயங்களில் உள்ள முக்கிய விஷயங்களையும் காட்சிப்படுத்தினர். குறிப்பாக குருசேத்ரா போரின் போது என்ன நடந்தது, விஷ்ணுவின் அவதாரங்கள், ஆழ்வார்கள் யார், துரியோதனின் வாழ்க்கை நிலை, 10 வது அத்தியாயத்தில் உள்ள நிகழ்வுகளை காட்சிப்படுத்தியது மனதை கவர்ந்தது.

இந்தக் கால குழந்தைகளின் உணவு பழக்க வழக்கங்கள் பல முறைகளில் மாறி இருக்கும் வேளையில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவினை அதிகம் உட்கொள்வதும், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை உட்கொள்வதும் உடலில் எதிர்வினை ஆற்றலை ஏற்படுத்துவதுடன், தீங்கு விளைவிக்கும் என்பதை விளக்கும் விதமாக சிறப்பு நாடகத்தை நடித்துக் காட்டிய விதம் அனைவரின் மத்தியிலும் வரவேற்பை பெற்றது.

இந்துக்கள் மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்குமான பொதுவான வாழ்க்கைத் தத்துவத்தை கற்றுக் கொடுக்கும் பகவத் கீதையை, பள்ளியின் ப்ராஜக்ட்டாக எடுத்துக் கொண்ட மழலைகள், நாடகங்களும், கண்காட்சிகளும் நிகழ்த்திக் காட்டியது பாராட்டுகளை பெற்றது. பகவத் கீதை எல்லோருக்குமான ஒன்று என்பதை உணர்த்திய மழலைச் செல்வங்களை நாமும் மனதார பாராட்டலாம்.

 

Tags: Padma Seshadri SchoolChennaiSchoolstudentsBhagavad Gita:
Share
Tweet
SendShare
Previous Post

சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடரும் வன்முறை..-வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் எரித்துக்கொலை..

Next Post

பொறுப்புள்ள நாடுகளின் குறியீட்டு பட்டியல் – அமெரிக்கா & சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா..!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies