அரசுமுறைப் பயணமாக இலங்கைத் தலைநகர் கொழும்பிற்கு சென்ற குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொழும்பு விமான நிலையம் சென்றடைந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு இலங்கையின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான ‘கண்டியன்’ நடனத்துடன், சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே-வை சந்தித்த சி.பி.ராதாகிருஷ்ணன், இரு நாட்டு உறவுகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
















