கேரள மாநிலம், திருச்சூரில் திருவிழாவுக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர்.
கேரளாவின் திரிச்சூரில் பூரம் திருவிழாவுக்காக அங்குள்ள குடோனில் பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் அங்கு திருவிழாவுக்காக பட்டாசுகள் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சேமிப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தக் கோர விபத்தில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
















