எந்த வடிவ பயங்கரவாதத்திற்கும் இந்தியா ஒருபோதும் பணியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களை நினைவு கூர்வதாக தெரிவித்துள்ளார்.
இந்த இழப்பை தாங்கிக்கொண்டு மீண்டு வர முயலும் துயருற்ற குடும்பங்களுடனும் உறுதுணையாக இருப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
எந்த வடிவ பயங்கரவாதத்திற்கும் இந்தியா ஒருபோதும் பணியாது என்றும், யங்கரவாதிகளின் இழிவான சதித் திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
















