திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில் விசிக – பாமக நிர்வாகிகள் மோதிக்கொண்டதில் 4 பேர் காயமடைந்தனர்.
ஆகாரம் பகுதியில் இருந்த வாக்குச்சாவடி மையம் அருகே நின்றுகொண்டிருந்த விசிக – பாமக நிர்வாகிகள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில், சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















