முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக முதலமைச்சர் விஜய் அடுத்த வாரம் டெல்லி செல்ல உள்ளார்.
தமிழக அரசின் 65 லட்சம் ரூபாய் நிதியுதவியுடன் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாநாட்டு மையத்திற்கு எதிரே 7 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் அடுத்த வாரம் டெல்லி செல்ல உள்ளார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக டெல்லி பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
















