கோவை சூலூரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு நேரில் ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் எல்.முருகன், பிஎன்எஸ் சட்டத்தின்கீழ், குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
சூலூரில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் கொளத்தூரில் தகனம் செய்யப்பட்டது. அங்கு சிறுமியின் பெற்றோருக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் நேரில் ஆறுதல் கூறினர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் எல்.முருகன், சிறுமி கொலை வழக்கில் கைதான இருவருக்கும் பிஎன்எஸ் சட்டத்தில் கடும் தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடியாக தண்டனை கிடைக்கும் வகையில், தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.
















