அமெரிக்க – ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒப்பந்தம் கையெழுத்தான உடனே ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களை வாங்குவதையோ, தயாரிப்பதையோ அல்லது வேறு எந்த வழியிலும் அணு ஆயுத பொருட்களை பெறுவதையோ இந்த ஒப்பந்தம் நிரந்தரமாக தடுக்கும் எனவும். ஈரான் அணு ஆயுதமேந்தா நிலையை உறுதி செய்யும் வலுவான சுவராக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
முந்தைய ஒபாமா அரசைப்போல ஈரானுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை இந்த முறை அமெரிக்கா வழங்காது எனவும். அமைதி ஒப்பந்தத்தில் எந்தவொரு பணப் பரிமாற்றமும் இருக்காது எனவும் அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் மிக விரைவாகவும், எளிதாகவும், சுமுகமாகவும் நடக்கும் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ள அவர்,எதிர்காலத்தில் ஈரானுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஒருவேளை இந்த ராஜதந்திர முயற்சி தோல்வியடைந்தால் ஈரானை ஒடுக்க அமெரிக்காவிடம் மிக உன்னதமான மாற்று வழிகள் தயாராகவே உள்ளதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
















