திருவண்ணாமலை அருகே ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அடுத்த அடிஅண்ணாமலை கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆதி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து குடமுழுக்கு விழா நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, கோபுரக் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள், அரோகரா முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
















