சவாலான சூழ்நிலைகளைக் கண்டு யாரும் பின்வாங்கக் கூடாது என்றும், மாறாக மீண்டும் எழுந்து நிற்கப் போராட வேண்டும் எனவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நடந்த சிந்து கல்விச் சங்கத்தின் 75வது நிறுவன தின விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 1947ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்தவர்கள் அகதிகள் அல்ல என்றும், தங்களின் தாய்நாடு மற்றும் தர்மத்தின் மீதான பற்று காரணமாகப் பெரும் இன்னல்களையும் துயரங்களையும் சகித்துக் கொண்ட போராளிகள் எனவும் தெரிவித்துள்ளார்.
புதிதாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தானில் பல தலைமுறைகளாக உருவாக்கி வளர்த்த செல்வம், நிலம் மற்றும் தொழிலை அப்படியே விட்டுவிட்டு இந்தியாவிற்கு வர முடிவெடுத்தனர் எனவும் கூறியுள்ளார்.
சவாலான சூழ்நிலைகளைக் கண்டு யாரும் பின்வாங்கக் கூடாது என்றும், மாறாக மீண்டும் எழுந்து நிற்கப் போராட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடினமான காலங்களிலிருந்து வெளிவர முயற்சி செய்யும் ஒருவரே இறுதியில் வெற்றியடைகிறார் என மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
















