அதிரடி காட்டும் மத்திய அரசு : விரைவில் வருகிறது E25 பெட்ரோல் - சிறப்பு தொகுப்பு!
Aug 5, 2026, 04:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிரடி காட்டும் மத்திய அரசு : விரைவில் வருகிறது E25 பெட்ரோல் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 9, 2026, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

E20 பெட்ரோல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், 2027-க்குள் E21 பெட்ரோலையும், 2029-க்குள் E25 பெட்ரோலையும் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மைலேஜ் குறைவு போன்ற பொதுமக்களின் கவலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த மாற்றம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எத்தனாலுக்கான கூடுதல் தேவையை உருவாக்கும் இந்தியாவின் உத்தியில், எத்தனால் கலப்புத் திட்டம் ஒரு முக்கியப் பகுதியாக மாறியுள்ளது.

2030 என்ற முந்தைய இலக்குக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, நாடு முழுவதும் E20 பெட்ரோல் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இது நாட்டின் எத்தனால் கலந்த பெட்ரோல் என்ற திட்டத்தின் கீழ் நிகழ்ந்த மிக வேகமான மாற்றங்களில் ஒன்றாகும்.

E 20 ரக பெட்ரோல் நடைமுறைக்குக் கொண்டு வந்ததன் மூலம் ஆண்டுதோறும் சுமார் 4.5 கோடி பேரல் கச்சா எண்ணெயைச் சேமித்த இந்தியா சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணியையும் சேமித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக மேலும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கத்தில் 25 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர மத்திய அரசு ஆய்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

மத்திய அரசின் உத்தரவின் படி E10, E20 பெட்ரோல் கொண்டு இயக்கப்படும் வாகனங்களில் E21, மற்றும் E25 ரக பெட்ரோலை கொண்டு இயக்கி அதன் செயல் திறன் உள்ளிட்ட அனைத்து சோதனைகளையும் ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆப் இந்தியா பரிசோதித்து வருகிறது.

E25 பெட்ரோல் கொண்டு சுமார் 1,50,000 கிலோ மீட்டர் வரையில் இயக்கி மேற்கொள்ளப்படும் சோதனைகள் , அடுத்த ஆண்டு முடிவடையும் என்றும், ஆய்வின் முடிவுகளை International Centre for Automotive Technology என்ற அமைப்புக்கு அனுப்பி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப் பட்டுள்ளது.

ஆய்வின் முடிவுகள் வெற்றிகரமாக முடியும் பட்சத்தில் இந்த E25 ரக பெட்ரோல் பெட்ரோல் பயன்பாட்டுக்கு வரும்.

அதிக எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு ஏற்றவகையில் இஞ்சின்களை வாகன உற்பத்தியாளர்கள் தயாரிக்கவும் அதற்கேற்ப , விநியோகச் சங்கிலிகள் மற்றும் உள்கட்டமைப்புகளைத் தயார் செய்யவும் போதுமான அவகாசம் அளிக்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.

E20 பெட்ரோல் பரவலாகக் கிடைக்கத் தொடங்குவதால், வாகனங்களின் இணக்கத்தன்மை மற்றும் எரிபொருள் திறன் குறித்து எழுப்பப்படும் கவலைகள் குறித்து அறிந்துள்ள மத்திய அரசு, இந்த மாற்றம் படிப்படியாகவும், தொழில்துறையின் தயார்நிலைக்கு ஏற்பவும் நடைமுறைப் படுத்தும் என்று கூறப்படுகிறது.

அமலுக்கு வரவிருக்கும் இந்த திட்டத்தால் வாகனங்களின் மைலேஜ், செயல் திறன் மற்றும் எத்தனால் கலப்புக்கு ஏற்ற தன்மை ஆகியவை குறித்த கேள்விகள் நுகர்வோர் மத்தியில் எழுந்துள்ளது.

Tags: us iran war liveiran war updateiran war latestisrael us iran warE20 petroE25 petrolcentral governmentiran warIran-US wariran war news
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு விலக்கு : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

உலகின் மூன்று மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறுவோம்; பிரதமர் மோடி

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies