தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஆலய கட்டுமானப் பணியின்போது மேற்கூரை இடிந்து விழுந்து 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி மீனவ கிராமத்தில், நல்ல ஆலோசனை மாதா ஆலயத்தின் புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், காயமடைந்த தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















