தென் மாவட்ட மக்களுக்கு திமுக அரசு சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
Sep 13, 2026, 04:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தென் மாவட்ட மக்களுக்கு திமுக அரசு சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
May 27, 2025, 06:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென் மாவட்ட மக்களுக்குச் சீராகக் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு வழங்கப்படும் குடிநீரானது, உறைக்கிணறுகளுக்குப் பதிலாகத் தாமிரபரணி ஆற்றிலிருந்து எடுக்கப்படுவதால் மக்கள் அவதியுறுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

உறைக்கிணறுகள் ஒப்பந்ததாரர்களின் மெத்தனப் போக்கால் முற்றிலுமாக சேதமடைந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள தகவல், திராவிட மாதிரி அரசின் நிர்வாக குளறுபடிகளைத் தோலுரித்துக் காட்டுகிறது எனவும் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

புகார்களை மூடி மறைக்க முயலும் திமுக அரசு, அசுத்தமான குடிநீரைக் குடித்து மக்களின் உயிருக்குப் பாதிப்பு ஏற்பட்டால் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளுமா எனக் கேள்வி எழுப்பியுள்ள நயினார் நாகேந்திரன், சில மாதங்களுக்கு முன்பு பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழந்த துயரத்திலிருந்து எதையும் கற்றுக் கொள்ளாமல் மக்களின் உயிரை திமுக அரசு அலட்சியப்படுத்துவது ஏன் எனவும் அவர் வினவியுள்ளார்.

உரிமைகளைப் பற்றி மேடைக்கு மேடை வகுப்பெடுக்கும் ஸ்டாலினுக்கு, குடிநீர் என்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்பதும், அதை முறையாக வழங்குவது அரசின் அடிப்படை கடமை என்பதும் தெரியாதா என விமர்சித்துள்ள நயினார் நாகேந்திரன்,

இதுகுறித்து உயர்மட்ட விசாரணையைத் தொடங்குவதுடன், மக்களுக்குச் சுத்தமான குடிநீர் தங்கு தடையின்றி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags: DMKMK Stalinநயினார் நாகேந்திரன்DMK government should distribute drinking water regularly to the people of the southern district: Nainar Nagendran insists
Share
Tweet
SendShare
Previous Post

மனோன்மணியம் பல்கலைக்கழ பருவத் தேர்வு வினாத்தாள் கசிவு : தேர்வு ஒத்திவைப்பு!

Next Post

தெய்வச்செயலை ஏன் பாதுகாக்கிறது திமுக?- இபிஎஸ் கேள்வி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies