விழுப்புரம் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல முயன்ற முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆதரவாளர்களை போலீசார் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதிமுகவில் உட்கட்சி பூசல் எழுந்துள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் எஸ். பி. வேலுமணி தலைமையில் ஒரு அணியில் செயல்பட்டு வருகின்றனர்.
இதனால், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோரின் கட்சி பொறுப்புகளை பறித்தும், புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தும் இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, விழுப்புரம் மாவட்ட கழகச் செயலாளராக அண்மையில் அதிமுகவில் இருந்து வெளியேறிய விழுப்புரம் நகர கழக செயலாளர் பசுபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
















