தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், புதிதாக 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர்.
சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வென்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில் அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தவெக ஆலோசனை நடத்தியது. இந்நிலையில் 23 சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரசுக்கு 2 இடங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விஸ்வநாதன், ராஜேஷ்குமார் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்கின்றனர். நாளை காலை 10 மணிக்கு சென்னை மக்கள் மாளிகையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
இதனிடையே அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன
















