தமிழக மின்சாரத்துறையின் நிதிப் பற்றாக்குறை 34 ஆயிரத்து 447 கோடி ரூபாயாக உள்ளது என வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சாரத்துறை தொடர்பான வெள்ளை அறிக்கையை அமைச்சர் நிர்மல்குமார் சென்னையில் வெளியிட்டார்.
அதில், 9 டெண்டர்கள் தொடர்பாக சுமார் ஆயிரத்து 28 கோடி ரூபாய் அளவிலான முறைகேடுகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட சில சந்தேகத்திற்குரிய டெண்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தற்போது மின் வாரியத்தின் நிதி பற்றாக்குறை 34 ஆயிரத்து 447 கோடி ரூபாயாக உள்ளதாக வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத் துறையின் மொத்தக் கடன் 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாயாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
2021 முதல் 2026-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், மின்வாரியத்திற்கு சுமார் 67 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த ஓராண்டில் மட்டும் 1 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருவாய், செலவு மற்றும் கடன் அதிகரித்த போதிலும், மின்சாரத் துறையின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என்றும் வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
















