வால்பாறை செல்ல திடீர் கட்டுப்பாட்டு: சுற்றுலாப் பயணிகள் கடும் அதிருப்தி!
Sep 14, 2026, 02:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வால்பாறை செல்ல திடீர் கட்டுப்பாட்டு: சுற்றுலாப் பயணிகள் கடும் அதிருப்தி!

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 10, 2023, 07:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வால்பாறைக்குச் செல்ல வனத்துறையினர் திடீர் கட்டுப்பாடு விதித்திருப்பது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதி வால்பாறை. இதன் இயற்கை அழகை ரசிக்க தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த சூழலில், ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் பார்கவ் தேஜா முன்னிலையில், ஆழியாறு சோதனைச் சாவடியில் வனத்துறை சார்பில் அண்மையில் அறிவிப்புப் பலகை ஒன்று வைக்கப்பட்டது.

அந்த அறிவிப்பில், வால்பாறைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குக் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் வேகமாக பரவி, வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து, வனத்துறையினர் கூறுகையில், “தற்போது வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மாலை 6 மணிக்கு மேல் வன விலங்குகள், தண்ணீர் குடிக்க சாலை ஓரங்களில் நடந்து செல்வதை பார்க்க முடிகிறது. அந்த நேரத்தில் சுற்றுலாப் பயணிகளை வனத்துக்குள் அனுமதித்தால், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், சுற்றுலா வரும் பயணிகளுக்கு வனவிலங்குகளிடம் எப்படி நடந்து கொள்வது என தெரியாது. இது போன்ற பிரச்சினைகள் காரணமாகவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

எனவே, வால்பாறைக்குச் சுற்றுலா செல்பவர்கள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை, தங்கள் சுற்றுலாப் பயண திட்டத்தை அமைத்துக் கொண்டால், இனிய சுற்றுலாவாக அமையும்.

Tags: ValparaiTouristForest DepartmentRestrictionupset
Share
Tweet
SendShare
Previous Post

விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடு?

Next Post

ரேஷன் பொருட்கள் வழங்க மறுப்பு: வெளி மாநிலத் தொழிலாளர்கள் தவிப்பு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies