கேரள குண்டுவெடிப்பு: என்.ஐ.ஏ., என்.எஸ்.ஜி. அதிகாரிகளுக்கு அமித்ஷா உத்தரவு!
Jul 29, 2026, 06:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள குண்டுவெடிப்பு: என்.ஐ.ஏ., என்.எஸ்.ஜி. அதிகாரிகளுக்கு அமித்ஷா உத்தரவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 29, 2023, 02:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைக்கு மாநில அரசுக்கு உதவுவதற்காக, என்.எஸ்.ஜி. மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகளை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டிருக்கிறார்.

கேரள மாநிலம் கொச்சியின் களமச்சேரியில் உள்ள சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில், யெகோவாவின் சாட்சிகளின் மண்டல மாநாடு கடந்த 27-ம் தேதி தொடங்கி 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான இன்று காலையில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.

பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தபோது, தீடீரென ஒரு இடத்தில் வெடிகுண்டு வெடித்தது. தொடர்ந்து, மேலும் 2 இடங்களில் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், குழந்தைகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இச்சம்பவம் குறித்துப் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறோம். அனைத்து உயர் அதிகாரிகளும் எர்ணாகுளத்தில் உள்ளனர். டி.ஜி.பி. சம்பவ இடத்துக்கு விரைகிறார். நாங்கள் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். டி.ஜி.பி.யிடம் பேசினேன். விசாரணைக்குப் பிறகே கூடுதல் விவரங்கள் தெரியவரும்” என்றார்.

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரளா முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு குண்டுவெடிப்பு குறித்து கேட்டறிந்தார். அப்போது, இச்சம்பவம் குறித்த மாநில அரசின் விசாரணைக்கு உதவும் வகையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளையும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த தேசிய பாதுகாப்பு கமாண்டோ படையினரையும் அனுப்பி வைப்பதாக அமித்ஷா தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, என்.ஐ.ஏ. மற்றும் என்.எஸ்.ஜி. அதிகாரிகள் கேரளாவுக்கு விரைந்திருக்கிறார்கள்.

Tags: KeralaBomb blastNiaAmitshansg
ShareTweetSendShare
Previous Post

எந்த தேர்தல் வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை! – அண்ணாமலை.

Next Post

பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies