சென்னை மாநகரம் மழையில் மிதப்பதற்கு திமுக, அதிமுகவே காரணம்!
Sep 12, 2026, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை மாநகரம் மழையில் மிதப்பதற்கு திமுக, அதிமுகவே காரணம்!

- பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன்!

Murugesan M by Murugesan M
Dec 1, 2023, 12:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாநில அரசுகள் ஏன் துணை ஏரிகளையும் துணை ஆறுகளையும் (கால்வாய்களையும்) இதுவரையில் உருவாக்கவில்லை? எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில்,

துணைநகரங்களை உருவாக்கும் அரசு துணைஏரிகளை ஏன் உருவாக்கவில்லை?

மழை வந்துவிட்டால் பூகம்பம் வந்துவிட்டதைப்போல தலைசிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடிக்கிறது திமுக நிர்வாகம்!

உண்மையில் சிறு மழையாலும்கூட அதிக பாதிப்பு தமிழக நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் ஏற்படுவதற்கு, 5 முறை ஆட்சியில் இருந்த திமுகவும், திமுக இல்லாத நேரங்களில் ஆட்சியில் இருந்த அதிமுகவுமே காரணம்!

குடியிருப்புகள் உருவாக்கப்படும் போதும், தெருக்கள் அமைக்கப்படும்போதும், கட்டிடங்களுக்கு அனுமதிகள் வழங்கப்படும்போதும், மழைநீர் வழிந்தோட உரிய ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை!

நீர்நிலைகளை நிரப்பி கட்டிடங்களை கட்டிக்கொள்ள இந்த அரசுகளால் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன!
ஒதுக்கப்படும் நிதியில் பாதியை கமிஷனாக பெற்றுக்கொண்டு மீதியை மட்டுமே சாலை அமைக்க செலவிடுவதால் சாலைகள் எல்லாம் ஓடைகளாக மாறிவிடுகின்றன!

இந்த ஆட்சியாளர்களே மழையின் அவதிக்கு காரணம்! இந்த உண்மை மக்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே, ஆட்சியாளர்கள் மழை வந்தவுடன் சினிமா ஆக்சன்போல தொலைக்காட்சிகளில் சீன் காட்டுகிறார்கள்!

வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு அமைச்சர்கள் தன்ணீரில் நடப்பது போட்டோவுக்கு போஸ்கொடுப்பது பேட்டி கொடுப்பது, இதுதான் கடமை என்று ஆளும் தரப்பு கருதுகிறது!

கண்டிப்பாக மழைநீரை பக்கெட்டில் பிடித்து ஊற்ற ஆள்வைப்பார்கள், இந்த தெருவில் ஓடும் நீரை உறிந்து எடுத்து அடுத்த தெருவில் விடவும் அடுத்த தெருவில் ஓடும் நீரை அதற்கும் அடுத்த தெருவில் விடவும் ஏராளமான மோட்டார்களையும் வேலையாட்களையும் நியமிப்பார்கள்!

மண்ணோடு, கல்லோடு, தாரோடு லாரிகள் வரும், வந்து கொட்டி நிரவுவார்கள்! இதுவெல்லாம் மக்களுக்கு உதவுவதற்காக அல்ல! அதிலே கமிஷன் பார்ப்பதற்காக!

நீர்நிலைகளிலும் நீர்நிலைகளுக்கு அருகிலும் அடுக்குமாடி கட்டிடம் கட்டிக்கொள்ள மந்திரிகளின் பினாமி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி, துணை நகரங்களையும் உருவாக்கும் மாநில அரசுகள் ஏன் துணை ஏரிகளையும் துணை ஆறுகளையும் (கால்வாய்களையும்) இதுவரையில் உருவாக்கவில்லை?

துணை ஏரி இருந்தால் ஏரி உடைக்காது, ஏரியில் மழைநேரத்தில் அதிக நீர் திறக்கவேண்டிய அவசியம் வராது! தமிழக அரசுகள் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல் அறிவுபூர்வமாக ஆட்சி நடத்தியிருந்தால், மேகம் கருத்தவுடன் பள்ளிகளுக்கு விடுப்பு அறிவிக்கவேண்டிய அவலம் ஏற்படாது! நீர்நிலைகளில் அரசு அனுமதியுடன் கட்டிடங்களை கட்டிக்கொண்டு, மழைவந்ததும், ““அய்யோ” “அய்யோ” என தொலைக்காட்சிகளில் அலறுவது வேதனையாக இருக்கிறது!

சாலைகளுக்கு ஒதுக்கிய பணத்தையும், மழைநீர் வடிகால்வாய்க்கு ஒதுக்கிய பணத்தையும், சாக்கடை கால்வாய்க்கு ஒதுக்கிய பணத்தையும் சரியாக முழுமையாக செலவு செய்திருந்தால், மழைநீர் சாலையில் தேங்கியிருக்காது!

வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியிருக்காது!
உண்மையில் ஊடகங்களும் பத்திரிக்கைகளும் அரசினையும் ஆண்டவர்களையும் குற்றஞ்சாட்டியிருக்க வேண்டும்!

மக்கள் ஆளுகிறவர்களையும் ஆண்டவர்களையும் நிற்க்கவைத்து கேள்வி கேட்கவேண்டும்! ஆனால் இவர்களோ மழையை குற்றம் சொல்கிறார்கள்! ஆனால் நமது கருத்து, “மழை வாழ்க! மழை மீண்டும் வருக!”

திட்ட நிதியில் சுரண்டல் செய்து மக்களை தவிக்கவிடும் அரசியலார் ஒழிக! நேர்மையான அரசியல் தமிழகத்தை ஆழ்க!” என்பதாகும்! எனத் தெதரிவித்துள்ளார்.

Tags: bjpkumarikrishnanchennai flood
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு – காஷ்மீரில் அமலாக்கத்துறை சோதனை!

Next Post

இந்திய அணியில் மாற்றங்கள் – சாதகமா, பாதகமா ?

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies