பீகாரில் கோவில் பூசாரி சுட்டுக்கொலை: கண்கள் பறிப்பு!
Sep 12, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பீகாரில் கோவில் பூசாரி சுட்டுக்கொலை: கண்கள் பறிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 17, 2023, 06:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டு, அவரது கண்கள் பிடுங்கப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டம் தானாபூரைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். 32 வயதான இவர், அங்குள்ள சிவன் கோவிலில் பூசாரியாக இருந்தார். இவரது சகோதரர் அசோக்குமார், அப்பகுதியின் முன்னாள் பா.ஜ.க. நிர்வாகி.

இந்த சூழலில், கடந்த 12-ம் தேதி முதல் பூசாரி மனோஜ்குமாரை காணவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்திருக்கிறார்கள். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, காணாமல் போன மனோஜ்குமாரை தேடிவந்தனர்.

இந்த நிலையில், பூசாரி மனோஜ்குமாரின் உடல், அப்பகுதியிலுள்ள முட்புதருக்குள் கிடப்பதாக நேற்று இரவு தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, விரைந்து சென்ற போலீஸார், மனோஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, மனோஜ்குமார் மாயமானது குறித்து போலீஸில் புகார் அளித்தும், கடந்த 5 நாட்களாக போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, அவரது உறவினர்களும், கிராம மக்களும் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர்.

மேலும், போராட்டத்தின்போது போலீஸ்காரர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். போலீஸ் வாகனத்துக்கும் தீவைத்தனர். இதில், 2 போலீஸார் படுகாயமடைந்தனர். பின்னர், தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து கோபால்கஞ்ச் சப்-டிவிஷனல் போலீஸ் அதிகாரி பிரஞ்சல் கூறுகையில், “கிராமத்தில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்க போதுமான போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

Tags: templeBiharpriestmurder
Share
Tweet
SendShare
Previous Post

குடும்பத்தினர் தாக்கியதாக காயத்தோடு வீடியோ வெளியிட்ட நடிகை!

Next Post

U-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் : வங்கதேசம் சாம்பியன்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies