பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் புத்தாண்டு வாழ்த்து!
Aug 5, 2026, 06:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் புத்தாண்டு வாழ்த்து!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 31, 2023, 03:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வாழ்த்துத் தெரிவித்திருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தற்போது புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு ரஷ்யாவுடனான இந்தியாவின் நட்பை வலுப்படுத்தி வருகிறார். அந்த வகையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கும் நிலையில், அந்நாட்டிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும் கூட, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது.

இதுபோன்ற காரணங்களால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார். இந்த சூழலில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 5 நாள் பயணமாக கடந்த 25-ம் தேதி ரஷ்யா சென்றார். அங்கு கடந்த 28-ம் தேதி ரஷ்ய அதிபர் புடினை, ஜெய்சங்கர் சந்தித்தார்.

அப்போது, எங்கள் நண்பர் அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடியை பார்க்க நாங்கள் ஆவலாக இருக்கிறோம். அவர் ரஷ்யா வந்தால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவோம். அதேசமயம், அடுத்த ஆண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. ஆகவே, அரசியல் நிகழ்ச்சிகள் பரபரப்பாக இருக்கும். எங்கள் நண்பர் மோடிக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகள் என்று கூறியிருந்தார்.

இந்த சூழலில், இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக புடின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உலகில் கடினமான சூழ்நிலை இருந்த போதிலும் ரஷியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான கூட்டாண்மை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.

வரும் ஆண்டில் சில முக்கிய முன்னேற்றங்கள், இரு தரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுபெறும். பன்முக இரு தரப்பு உறவுகளை வளர்ப்பதற்கும், பிராந்திய மற்றும் உலகளவில் பாதுகாப்பு, ஸ்திரத் தன்மையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு வளர வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: new yearPM ModirussiaPresidentGreetsVladimir Putin
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் சாதனைகள் தொடர வேண்டும்: பிரதமர் மோடி!

Next Post

கேப்டன் மில்லர் வெளியாகும் தேதி மாற்றம்?

Related News

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது – தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மரிய வில்சன்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உதயநிதி ஆபாச பேச்சு விவகாரம் : சென்னையில் கைது – தஞ்சையில் விடுவிடுப்பு – முழு விவரம்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies