பாஜக சமர்ப்பித்த வெள்ளை அறிக்கையை செயல்படுத்த திமுக அரசு முன்வரவில்லை! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sep 17, 2026, 12:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக சமர்ப்பித்த வெள்ளை அறிக்கையை செயல்படுத்த திமுக அரசு முன்வரவில்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 03:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 பாஜக சமர்ப்பித்த வெள்ளை அறிக்கையை திமுக அரசு செயல்படுத்தவில்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, 

சங்ககாலத்தில் கோவூர் நாடு என்றழைக்கப்பட்ட அதியமான் மன்னர்கள் ஆண்ட பூமி ஊத்தங்கரை. காசி விஸ்வநாதர் ஆலயம், லட்சுமி நாராயண பெருமாள் கோவில், கல்லாவி வேடியப்பன் சுவாமி என மக்களின் வாழ்வியலோடு நெருக்கமான கோவில்கள் அமைந்திருக்கும் பகுதி.

மாங்கனி நகரம் என்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெயர் வருவதற்கு காரணமே ஊத்தங்கரை தொகுதியில் ஊத்தங்கரை, மத்தூர், போச்சம்பள்ளி போன்ற பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஹெக்டர் விளைநிலங்களில், மாம்பழம் சாகுபடி செய்யப்படுவதால்தான்.

சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் பல விவசாயிகள் பனை மர வளர்ப்பில் ஈடுபடுகின்றார்கள். இவர்களின் முக்கிய வாழ்வாதாரமே பனை வெல்லம் தான். வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக பனை வெல்லம் கொள்முதல் என்ற கோரிக்கையை திமுக நடைமுறைப்படுத்தவில்லை.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாஜக சமர்ப்பித்த வெள்ளை அறிக்கையில், பனை மரம் ஏறுவது, கள் இறக்குவது, பனை சார்ந்த தொழில்களை அரசு ஊக்குவிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். ஆனால், அந்த வெள்ளை அறிக்கையை செயல்படுத்த திமுக அரசு முன்வரவில்லை.

கடந்த 2009 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நீதிபதி கு.ப. சிவசுப்பிரமணியம் அவர்கள் தலைமையிலான குழுவின் அறிக்கை, ‘கேடு விளைவிக்கக்கூடிய ரசாயனப் பொருள்களை மூலப்பொருள்களாக வைத்து தயாரிக்கப்படும் வெளிநாட்டு வகை மதுபானங்களை அனுமதிக்கும்போது குறைந்த பாதிப்பு கொண்ட கள்ளைத் தடை செய்வது என்பதை நியாயப்படுத்த முடியாது’ எனக் குறிப்பிட்டிருந்தது.

ஆனால் திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகள் வருமானத்துக்காக, இந்த அறிக்கை திமுக அரசால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் தருமபுரி இடையே தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு 1331 கோடி ரூபாய், தமிழகத்தில் பிரதமர் மோடி வழங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று கிருஷ்ணகிரியில் உள்ளது.

27,213 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 2,20,188 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,45,579 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,10,425 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,08,623 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,54,588 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், 4,403 கோடி ரூபாய் முத்ரா கடனுதவி என, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

ஆனால் திமுக ஊத்தங்கரை தொகுதிக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான ஊத்தங்கரையில் அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தல், போச்சம்பள்ளி – சூர்யகாந்தி எண்ணெய் தயாரிப்புத் தொழிற்சாலை, போச்சம்பள்ளியில் கனிமப் பொருள் ஏற்றுமதி மையம், பூக்கள் ஏற்றுமதி மையம், போச்சம்பள்ளி -மருதேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகத்துக்காக, தமிழ் மொழிக்காக, பல்வேறு நலத்திட்டங்கள் தந்துள்ள பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, தமிழகமும் இம்முறை பெரும்பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaiannamalai en mann en makkal rally
Share
Tweet
SendShare
Previous Post

75-வது குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை!

Next Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : 40 நாட்கள் சிறப்பு வழிபாடு!

Related News

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

Load More

அண்மைச் செய்திகள்

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies