இந்தியா மற்றும் பிரதமர் மோடி அவமதிக்கப்பட்ட விவகாரம் : நீதிமன்ற அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்!
Sep 10, 2026, 01:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா மற்றும் பிரதமர் மோடி அவமதிக்கப்பட்ட விவகாரம் : நீதிமன்ற அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 06:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடியரசு தின விழா கலை நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நமது நாட்டை தவறாக சித்தரித்து அவமதித்த புகாரில் கேரள உயர் நீதிமன்ற அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.

நாட்டின் 75-வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்திலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, உயர் நீதிமன்ற ஆடிட்டோரியத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் ‘ஒரே நாடு, ஒரே கண்ணோட்டம், ஒரே இந்தியா’ என்ற தலைப்பில் நீதிமன்ற ஊழியர்கள் கலை நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியையும், தேசத்தையும் தவறாக சித்தரித்ததாக நீதிமன்ற உதவி பதிவாளர் டி.ஏ.சுதிஷ், நீதிமன்ற உயர்நிலை காப்பாளர் பி.எம்.சுதீஷ் ஆகியோர் மீது பா.ஜ.க. ஆதரவு அமைப்பான பாரதிய அபிபாஷகா பரிஷத் மற்றும் எர்ணாகுளம் சட்டப் பிரிவு ஆகியவை புகார் அளித்தன.

அப்புகாரில், “பிரதமர் நரேந்திர மோடியின் வார்த்தைகள், பாணி ஆகியவற்றைப் போன்று பிரதிபலித்து நாட்டின் நிர்வாகத் தலைவர்களை இழிவுபடுத்தவும், அவமதிக்கவும் மேற்கண்ட நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த நாடகம் அரசியல் நோக்கம் கொண்டது மற்றும் இழிவானது, ஆட்சேபிக்கத்தக்கது. மேலும், இது கேரள உயர் நீதிமன்றத்தின் நடத்தை விதிகள் மற்றும் சேவை விதிகளுக்கு முரணானது” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, இப்புகார் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு பதிவாளருக்கும் (கண்காணிப்பு), இச்சம்பவம் தொடர்பாக விரிவான விளக்கத்தை சமர்ப்பிக்குமாறு பதிவாளருக்கும் (நிர்வாகம்) தலைமை நீதிபதி ஏ.ஜே.தேசாய் உத்தரவிட்டார். மேலும், விசாரணை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ள அதிகாரிகள் இருவரும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Tags: PM ModiKeralahigh courtinsult2 Officers Suspend
Share
Tweet
SendShare
Previous Post

தாயின் நினைவிடம் அருகே பவதாரிணியின் உடல் அடக்கம்!

Next Post

பாகிஸ்தானில் அதிகரிக்கும் நிமோனியா – 220 குழந்தைகள் பலி!

Related News

உயிருக்கு அஞ்சி பாதுகாப்பு கேட்ட இளைஞரை காப்பாற்ற முடியாத காவல்துறை எதற்கு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது – அமைச்சர் விக்னேஷ்

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies