எமர்ஜென்சியின் போது ஜனநாயகம் ஆபத்தில் இல்லையா? இண்டி கூட்டணிக்கு பிரதமர் மோடி கேள்வி!
Apr 29, 2026, 04:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எமர்ஜென்சியின் போது ஜனநாயகம் ஆபத்தில் இல்லையா? இண்டி கூட்டணிக்கு பிரதமர் மோடி கேள்வி!

Murugesan M by Murugesan M
Apr 11, 2024, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட போது ஜனநாயகம் ஆபத்தில்  இல்லையா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம்  நாக்பூர் மாவட்டம் கன்ஹான் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

அப்போது,மோடி மூன்றவாது முறையாக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்திற்கு  ஆபத்து ஏற்படும் என இண்டி கூட்டணி தலைவர்கள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாட்டில் எமர்ஜென்சி நடைமுறைபடுத்தபட்ட போது  ஜனநாயகம் ஆபத்தில் இருக்கவில்லையா? மோடி ஆட்சியில் ஏழைகள் முன்னேறுவதை இண்டி கூட்டணி தலைவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இருபதுக்கும் மேற்பட்ட தலைவர்கள் இண்டி கூட்டணி என்ற பெயரில் ஒன்றுகூடி, மக்களை பிளவுபடுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அவர், மக்கள் ஒற்றுமையாக இருந்து தேசிய நலனுக்காக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தி, சனாதன தர்மத்தை ஒழிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஒரு நாடு ஒரே அரசியலமைப்பு என்ற கருத்தை நாட்டில் செயல்படுத்த காங்கிரஸ் அனுமதிக்கவில்லை என்று பிரதமர் கூறினார். அரசியலமைப்புச் சட்டம் அவர்களுக்கு  முக்கியமானதாக இருந்தால், 70 ஆண்டுகளாக  ஏன் செயல்படுத்தவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பாஜக ஆட்சியில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அரசியல் சட்டம் அமல்படுத்தப்பட்டதாகவும், ஆனால் காங்கிரஸ் ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை உயிர்ப்புடன் வைத்திருந்தது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.  இந்திய அரசியலமைப்பும் ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பும் வேறு என்று தெரிவித்த பிரதமர், 370வது சட்டப்பிரிவை நீக்கி ஜம்மு காஷ்மீரில் அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக அம்பேத்கருக்கு நாட்டின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா வழங்க மறுத்ததற்கும், தலித் மற்றும் பழங்குடியினரை புறக்கணித்ததற்கும் காங்கிரஸ் மீது அவர் சாடினார்.

Tags: pm campaginPM ModiCongressNagpurINDI Alliancedemocracy and Constitution
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் தோல்வி!

Next Post

ரமலான் பண்டிகை : சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies