கேரளாவில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இன்று கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை. நாளை எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்க ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா, ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நாளை மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.