தமிழகத்திற்கு ரூ. 944.80 கோடி வெள்ள நிவாரண நிதி - பிரதமர் மோடிக்கு எல்.முருகன், அண்ணாமலை நன்றி!
Sep 9, 2026, 09:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்திற்கு ரூ. 944.80 கோடி வெள்ள நிவாரண நிதி – பிரதமர் மோடிக்கு எல்.முருகன், அண்ணாமலை நன்றி!

Murugesan M by Murugesan M
Dec 7, 2024, 10:44 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை சீரமைக்க தமிழகத்திற்கு 944.80 கோடியை மத்திய அரசு நிவாரண நிதியாக விடுவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வரும் நிலையில், புயல் பாதிப்புகளை சீரமைக்க, மாநில பேரிடர் மீட்பு நிவாரண நிதியில் இருந்து தமிழகத்திற்கு 944 கோடியே 80 லட்சம் ரூபாயை மத்திய அரசு நிவாரண நிதியாக விடுவித்துள்ளது.

நடப்பு ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 28 மாநிலங்களுக்கு ஒட்டுமொத்தமாக 21 ஆயிரத்து 718 கோடி ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்துள்ளது. இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுடன் மோடி அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை சீரமைக்க தமிழகத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசின் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து 944 கோடியே 80 லட்சம் ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளதற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், மோடி அரசு எப்போதும் தமிழக மக்களின் நலன்களுக்காகவே நிற்கிறது என்பதை இந்த விரைவான நடவடிக்கை மூலம் எடுத்துக் காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்

இதேபோல் மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தள பதிவில், தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய இத்தகைய பாதிப்புகளிலிருந்து மீள்கின்ற வகையில், பேரிடர் நிவாரண நிதியை விடுவித்தற்காக பிரதமர் மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், தமிழக மக்கள் அனைவரது சார்பாக நன்றிகளைத் தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Tags: chennai metrological centerrain alertweather updatelow pressurerain warningmetrological centerfengalPM Moditamandu rainL Muruganfengal relief fundannamalaiheavy rain
Share
Tweet
SendShare
Previous Post

நேரத்துக்கு ஏற்றபடி முடிவு செய்து கொள்ளலாம் என்ற முடிவில் திருமாவளவன் – தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

Next Post

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிப்பு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Related News

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies