தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!
Apr 30, 2026, 04:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Mar 13, 2025, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்குச், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது என பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்த வயதான விவசாயத் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இதே பகுதியில் உள்ள சேமலைகவுண்டம்பாளையத்தில், தாய், தந்தை, மகன் என மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டும், பல்லடம் பகுதியில், இதே போன்று வீட்டில் புகுந்து ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது.

தொடர்ந்து இதே பகுதியில், தனியாக வசித்து வருபவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஆனால், தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை என அவர்   குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்குச், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குரியதாக இருக்கிறது. பாலியல் குற்றங்கள், படுகொலைகள், போதைப்பொருள் புழக்கம், கொள்ளை என, வாழத்தகாத மாநிலமாகத் தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரோ, கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

உங்களால் படுகொலைகளையும் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளையும் கைது செய்ய முடியவில்லை. திமுக அரசினால் கைகள் கட்டப்பட்டுள்ள காவல்துறை மீது பொதுமக்கள் முற்றிலுமாக நம்பிக்கை இழந்து விட்டார்கள் என அண்ணாமலை கூறியுள்ளார்.

சேமலைகவுண்டம்பாளையம் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கை, சிபிஐக்கு மாற்றக் கோரி, முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தோம். இந்த அனைத்துக் கொலை வழக்குகளையும், சிபிஐ விசாரணைக்கு மாற்றினால்தான், தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: tamil janam tvஅண்ணாமலை குற்றச்சாட்டுLaw and order is in disarray in Tamil Nadu: Annamalai alleges!DMKஅண்ணாமலைbjp k annamalaiMK Stalintn bjp
ShareTweetSendShare
Previous Post

சுற்றுலா பயணிகளைத் துரத்திய காட்டுயானை!

Next Post

சமூக ஆர்வலர் மீது தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகி!

Related News

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

இன்றைய தங்கம் விலை!

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – விஜய் மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை!

3-வது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது தவெக – ஆக்சிஸ் மை இண்டியா கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி – பீப்பில்ஸ் பல்ஸ், சாணக்யா, பி மார்க் கருத்துக்கணிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

எங்கும் தாமரை மலர்வதை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது – ஷெசாத் பூனாவாலா

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு புதிய விதிமுறை – நாளை முதல் அமல்!

பெங்களூரு அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

உத்தரப்பிரதேச மக்களை இழிவுப்படுத்தும் திமுக போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி – பிரதமர் மோடி

மேற்குவங்க இறுதிகட்ட தேர்தல் – 91.71 % வாக்குகள் பதிவு!

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies