தோல்வி பயம் காரணமாக திமுக அரசு மூன்றாயிரம் ரூபாய் பொங்கல் பரிசை அறிவித்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ஒரு பைசா கூட திமுக அரசு வழங்கவில்லையென குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் தேர்தல் தோல்வி பயம் காரணமாக தற்போது மூன்றாயிரம் ரூபாய் அறிவித்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
அதேபோல் திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியம் கோரி போராடி வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், அப்போது எல்லாம் அவர்களை திரும்பி பார்க்காமல், இப்போது அவர்களை ஏமாற்றும் வகையில் மோசடி ஓய்வூதிய திட்டத்தை அறிவித்திருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
மேலும் சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தினாலே இது போன்ற அறிவிப்புகளை வெளியிடுவதாகவும் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
















