அரசு ஊழியர்கள், செவிலியர்கள் போன்றோரின் தொடர் போராட்டங்களால் தமிழ்நாடு போராட்டக்களமாக மாறிவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் பேசிய அவர், தேர்தல் நெருங்குவதால் புதிய திட்டங்களை முதலமைச்சர் அறிவிப்பதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், இதன் காரணமாக தமிழ்நாடு போராட்டக்களமாக மாறிவிட்டது என்றும் கூறினார்.
“திமுக ஆட்சியில் நல்லது செய்திருந்தால் எதற்காக போராடுகிறார்கள் என அவர் கேள்வி எழுப்பினார்.
“ஊழல் செய்வது, கொள்ளையடிப்பது, மக்களை சுரண்டுவதுதான் திமுக அரசின் சாதனை என்றும், “திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுக்க திமுக அரசு தவறிவிட்டதாகவும் இபிஎஸ் குற்றம்சாட்டினார்.
















