தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களுக்கு 75 ஆண்டுகளுக்கு பிறகு டிராக்டர் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்டன. பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் வட்டுவனஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட மலை கிராமங்களான கோட்டூர் கிராமத்தில் 314 பேரும், ஏரிமலை, அலகட்டு கிராமத்தில் 323 வாக்காளர்கள் என இரண்டு கிராமங்களிலும் மொத்தம் 637 வாக்காளர்கள் உள்ளனர். இக்கிராமங்களுக்கு கடந்த 75 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாத காரணத்தால், கடந்த காலங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கழுதைகள் மூலம் செங்குத்தான மலை பாதையில் 5 கிலோ மீட்டர் தூரம் வரை கழுதை மேல் சுமந்து சென்றும், அதிகாரிகள் நடந்து சென்றும் வாக்குப்பதிவு நடத்தினர். இந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு மண் சாலை அமைக்கப்பட்டுள்ளதால், 75 ஆண்டுகளுக்கு பிறகு டிராக்டர் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மலைகிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
















