திருவள்ளூர் அருகே வாக்காளர்களை கவரும் வகையில் தேர்தல் ஆணையம் அசத்தலான ஏற்பாடுகளை செய்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெறுவதை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளும் தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில், சோழவரம் ஒன்றியத்துக்குட்பட்ட நல்லூர் ஊராட்சி ஆட்டந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வாழை மரங்கள் கட்டி, வழியில் பச்சை வண்ண தரை விரிப்பான் அமைக்கப்பட்டு இரண்டு பக்கங்களிலும் செடிகள் வைத்து, பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பச்சை வண்ண தென்னை ஓலை கட்டி செல்பி பாயிண்டும் வாக்களர்களை கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
















