தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் 5.73 கோடி வாக்காளர்கள் இருக்கக்கூடிய நிலையில மாநிலம் முழுவதும் 75,032 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினரும், அதே சமயம் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணிக்காக 295 கம்பெனிகளை சேர்ந்த 23,000 துணை ராணுவ படையினரும் தமிழகம் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நாளைய தினம் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் காலை அல்லது மாலையில் வாக்களிக்க செல்லுமாறும், மதிய வேளைகளில் செல்பவர்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ளவும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
















