தவறான ஆட்சி மற்றும் மக்கள் விரோத அரசியலால் தமிழக மக்களின் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்கள் புதிய அரசை தேர்வு செய்துள்ளதை பாஜக வரவேற்பதாகத் தெரிவித்தார். புதிய முதலமைச்சர் விஜய் தங்களோடு சேர்ந்து இணக்கமாக பயணிப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், PM Scheme தொடர்பாக விரைவில் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.
பாஜக-வின் வெற்றிக்கு காங்கிரஸ் தான் காரணம் என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தது குறித்து பதிலளித்த அவர், பாஜகவின் வெற்றி மக்களால் கிடைத்த வெற்றி என்றும், தமிழ்நாடு மக்களுக்கு தவறான கருத்துகளை திமுக பரப்பி வருவதாகவும் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டினார்.
சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு குளறுபடி விவகாரத்தை மத்திய அரசு முதன்மையானதாக எடுத்துக்கொள்வதாகவும், ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடி கான்பூர் இணைந்து தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தர்மேந்திர பிரதான் கூறினார். தவறான ஆட்சி மற்றும் மக்கள் விரோத அரசியலால் தமிழக மக்களின் நம்பிக்கையை திமுக இழந்துவிட்டதாகவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
















