திமுகவால்தான், சட்டசபை தேர்தலில், தான் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டதாக கட்சி நிர்வாகிகளிடம் திருமாவளவன் வருத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக திருமாவளவன் அறிவித்தார்.
மாநில அரசியலில் கவனம் செலுத்தவிருந்த திருமாவளவனின் முடிவை திமுக தலைமை ஏற்காததால் கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிடவில்லை எனக்கூறி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி என்பவரை வேட்பாளராக அறிவித்தார்.
தேர்தலுக்கு பின்னர் தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்த விசிக, அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவை மாற்றி இருக்கக் கூடாது என கட்சி நிர்வாகிகளிடம் திருமாவளவன் வருத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தலைமை பேச்சை கேட்காமல் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் தற்போது அமைச்சராகி இருக்கலாம் என்றும், தமிழக அரசியலில் கூடுதல் கவனம் செலுத்த வசதியாக இருந்திருக்கும் எனவும் திருமாவளவன் கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
















