போலீசார் லஞ்சம் கேட்டாலும் கொடுக்க கூடாது என சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தியதாக பார் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
சென்னையில் பார் உரிமையாளர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோருடன், காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், பார்கள் தொடர்பான சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல்துறை சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, காவல்துறையினர் யாரேனும் லஞ்சம் கேட்டால், லஞ்சம் கொடுக்காமல் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ஆணையர் அறிவுறுத்தியதாக பார் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், இரவு 10 மணிக்கு மதுபான விற்பனை முடிவடையும் நிலையில், தூய்மைப்படுத்தும் பணி உள்ளிட்டவைகளுக்காக கூடுதலாக 30 நிமிடங்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
















