நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும், எதிர்க்கட்சிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் நீடித்ததால் அவை நடவடிக்கைகள் பலமுறை முடங்கின.
இந்நிலையில், இறுதி நாள் நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்றனர். வந்தே மாதரம் பாடலுடன் அவை நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சியினர் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
















