அதிமுக,அமமுக உள்ளிட்ட மாற்று கட்சியிலிருந்து விலகி ஏராளமானோர் தவெகவில் இணைந்தனர்.
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால், அதிமுக முன்னாள் எம்.பி.க்கள் பாலகங்கா, வனரோஜா, இளவரசன், அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ரவி, முருகேசன், பாஜக முன்னாள் நிர்வாகி விஜயதரணி உள்ளிட்ட ஏராளமானோர் தங்களது கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைத்துக் கொண்டனர்.
விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, தவெகவினர் ஒரே குடும்பமாக இணைந்து மக்களுக்கு பணியாற்றுவோம் என தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய என். ஆனந்த்,
மாற்றுக் கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்தவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
















