நீட் தேர்வு தமிழக மாணவர்களின் எதிர்காலத்திற்கு தேவையானது என பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் போஜராஜன் தெரிவித்துள்ளார்.
பேரவையில் பேசிய அவர், தமிழக மாணவர்களை ஏன் தாழ்வு மனப்பான்மையுடன் பார்க்க வேண்டும்? என்றார்.
கடந்த தேர்வில் பல்லடத்தில் ஒரே தமிழ் பள்ளியில் 10 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்றும், திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 141 பேர் வெற்றி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
“திருப்பூர் போல மாநிலம் முழுவதும் அரசு சார்பில் நீட் பயிற்சி முகாம்கள் நடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்கள் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் என்றும், ஏழை குழந்தைகள் எங்கே செல்வார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.,
















