ஜி20 உச்சி மாநாடு: பாகிஸ்தானியர்கள் பாராட்டு!
Apr 29, 2026, 10:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி20 உச்சி மாநாடு: பாகிஸ்தானியர்கள் பாராட்டு!

வெளிநாட்டுக் கொள்கையில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததாக விரக்தி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 14, 2023, 06:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் இந்தியாவுக்கு பாகிஸ்தானியர்கள் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்கள். அதேசமயம், வெளிநாட்டுக் கொள்கையில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததாக விரக்தியுடன் கூறியிருக்கிறார்கள்.

இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு, தலைநகர் டெல்லியில் கடந்த 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். இம்மாநாட்டின் சிறப்பம்சமே, ஜி20 டெல்லி பிரகடனம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான். இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று பாரதப் பிரதமர் மோடி கூறியிருந்தார். மேலும், ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் இந்தியாவுக்கும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் உலக நாடுகள் பலவும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களும் இந்தியாவுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் அளித்திருக்கும் பேட்டியில், “உலகின் முக்கிய 20 நாடுகளின் தலைவர்கள் ஒரு நாட்டிற்கு வருகை தரும்போது, அது அந்த நாட்டிற்கு மிகவும் பெருமையானதாகும். அந்த வகையில், ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு முக்கிய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருப்பது, இந்தியாவுக்குப் பெரும். மேலும், இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் அதிக பயனடையும்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, மற்றொருவர் கூறுகையில், “ஜி20 உச்சி மாநாடு இந்தியா தலைமையில் நடந்து முடிந்திருக்கும் நிலையில், நாங்கள் வெளிநாட்டுக் கொள்கையில் தோல்வியடைந்ததாகக் கருதுகிறேன். பாகிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளாக பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு மோசமான நிலையில் இருந்து வருகிறது” என்று கூறியிருக்கிறார்.

இன்னொருவர் அளித்திருக்கும் பேட்டியில், “நாங்கள் எங்களது பொருளாதாரத்தை பாதுகாக்க முயற்சி செய்யும்போது, இந்தியா சக்தி வாய்ந்த உலக நாடுகளின் தலைவர்களை வரவழைத்து ஜி20 உச்சி மாநாட்டை நடத்தி இருக்கிறது. இதன் மூலம் இந்தியா சிறந்த அடியை முன்னெடுத்து வைத்திருக்கிறது. இது இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் பெருமை அளிக்கும் தருணம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் ஒருவர் கூறுகையில், “ஜி20 மாநாட்டில் பங்கேற்க சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். அவர், பாகிஸ்தானுக்கு வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர் வரவில்லை. ஒரு மிகப்பெரிய மாநாட்டை இந்தியா நடத்தி முடித்திருக்கிறது. இந்தியா முன்னேறிக் கொண்டிருப்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

#WATCH | Pakistan: Another local says, “I think we have failed in our foreign policy and because of this the G-20 summit is being held in our neighbouring country and heads of state are coming. In the last 5-6 years our economy and the security situation have deteriorated. The… pic.twitter.com/HFhwPhWPtg

— ANI (@ANI) September 14, 2023

 

Tags: PM ModiIndiapakistanG20 summitPraisedPeople
ShareTweetSendShare
Previous Post

இறுதிப் போட்டிக்கு செல்லும் அணி எது ?

Next Post

ஆர்.எஸ்.எஸ். கூட்டம்: மோகன் பகவத், ஜெ.பி.நட்டா பங்கேற்பு!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies