ஜி20 உச்சி மாநாடு: பாகிஸ்தானியர்கள் பாராட்டு!
Sep 13, 2026, 02:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி20 உச்சி மாநாடு: பாகிஸ்தானியர்கள் பாராட்டு!

வெளிநாட்டுக் கொள்கையில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததாக விரக்தி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 14, 2023, 06:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் இந்தியாவுக்கு பாகிஸ்தானியர்கள் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்கள். அதேசமயம், வெளிநாட்டுக் கொள்கையில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததாக விரக்தியுடன் கூறியிருக்கிறார்கள்.

இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு, தலைநகர் டெல்லியில் கடந்த 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். இம்மாநாட்டின் சிறப்பம்சமே, ஜி20 டெல்லி பிரகடனம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான். இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று பாரதப் பிரதமர் மோடி கூறியிருந்தார். மேலும், ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் இந்தியாவுக்கும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் உலக நாடுகள் பலவும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களும் இந்தியாவுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் அளித்திருக்கும் பேட்டியில், “உலகின் முக்கிய 20 நாடுகளின் தலைவர்கள் ஒரு நாட்டிற்கு வருகை தரும்போது, அது அந்த நாட்டிற்கு மிகவும் பெருமையானதாகும். அந்த வகையில், ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு முக்கிய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருப்பது, இந்தியாவுக்குப் பெரும். மேலும், இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் அதிக பயனடையும்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, மற்றொருவர் கூறுகையில், “ஜி20 உச்சி மாநாடு இந்தியா தலைமையில் நடந்து முடிந்திருக்கும் நிலையில், நாங்கள் வெளிநாட்டுக் கொள்கையில் தோல்வியடைந்ததாகக் கருதுகிறேன். பாகிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளாக பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு மோசமான நிலையில் இருந்து வருகிறது” என்று கூறியிருக்கிறார்.

இன்னொருவர் அளித்திருக்கும் பேட்டியில், “நாங்கள் எங்களது பொருளாதாரத்தை பாதுகாக்க முயற்சி செய்யும்போது, இந்தியா சக்தி வாய்ந்த உலக நாடுகளின் தலைவர்களை வரவழைத்து ஜி20 உச்சி மாநாட்டை நடத்தி இருக்கிறது. இதன் மூலம் இந்தியா சிறந்த அடியை முன்னெடுத்து வைத்திருக்கிறது. இது இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் பெருமை அளிக்கும் தருணம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் ஒருவர் கூறுகையில், “ஜி20 மாநாட்டில் பங்கேற்க சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். அவர், பாகிஸ்தானுக்கு வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர் வரவில்லை. ஒரு மிகப்பெரிய மாநாட்டை இந்தியா நடத்தி முடித்திருக்கிறது. இந்தியா முன்னேறிக் கொண்டிருப்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

#WATCH | Pakistan: Another local says, “I think we have failed in our foreign policy and because of this the G-20 summit is being held in our neighbouring country and heads of state are coming. In the last 5-6 years our economy and the security situation have deteriorated. The… pic.twitter.com/HFhwPhWPtg

— ANI (@ANI) September 14, 2023

 

Tags: PM ModiIndiapakistanG20 summitPraisedPeople
Share
Tweet
SendShare
Previous Post

இறுதிப் போட்டிக்கு செல்லும் அணி எது ?

Next Post

ஆர்.எஸ்.எஸ். கூட்டம்: மோகன் பகவத், ஜெ.பி.நட்டா பங்கேற்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies