ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் 1.29 லட்சம் ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் புயல் பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழைநீர் வடிந்த பிறகு முழுமையான ஆய்வு நடத்தப்பட்டு சேத மதிப்பு கணக்கிடப்படும் என கூறினார். மேலும், தண்ணீர் சூழ்ந்துள்ள இடங்களில் மின்சாரம் வழங்க முடியாத சூழல் உள்ளதாகவும், புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.