திராவிட மாடல் அரசு குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படுகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளுநரிடம் மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யார் அந்த சார்? என்பது குறித்து தமிழக மக்களிடம் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்தார்.
திமுகவால் பெண்கள் அதிகளவு பாதிக்கப்படுள்ளதாகவும், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மிழிசை
“தோழமை கட்சிகளுக்கு மட்டும் போராட அனுமதி தமிழக காவல்துறை அனுமதியளிப்பதாகவும், பாஜக என்றால் அனுமதி இல்லையா? என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.